பரிதாபமாக போன 21 வயதுடைய இளைஞனின் உயிர்!

மட்டக்களப்பு ஆரையம்பதி 5ம் கட்டைப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 5ம் கட்டை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள சந்தியில் நேற்றிரவு 10.00மணியளவில் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 விபத்தில் புதிய காத்தான்குடி 06 ஆலிம் வீதி தோணா சந்தி எனும் முகவரியைச் சேர்ந்த அப்துஸ்லாம் அப்துல்லாஹ் 21 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் பிரபல ஆடையக உரிமையாளரான காத்தான்குடியைச் சேர்ந்த அப்துஸ்லாம் அவர்களின் மகன் என்று தெரிய வந்துள்ளது.

வேனும் மோட்டார்சைக்கிளும் ஆரையம்பதி 5ம் கட்டை பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்னால் உள்ள சந்தியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. வேன் அக்கரைப்பற்றை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்த வேன் என தெரிவிக்கப்படுகிறது.

21 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றையவர் காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jFFANA
யாழில் குடும்பஸ்தரின் கண்ணில் மிளகாய்த்தூள் வீசிவிட்டு கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
image
கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்கொடுமை! மறைக்கப்பட்ட பல சாட்சியங்கள்!
CHEMMANANO
செம்மணியில் ஏற்றப்பட்டது "அணையா தீபம்"!
jaffna musik2
யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டது
vaal
யாழில் சகோதரர்கள்மீது வாள்வெட்டு
Israel Police
அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்