பேருந்தின் மிதி பலகையிலிருந்து விழுந்த மாணவன்! போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிரடி நடவடிக்கை!

வடமேல் மாகாணத்தில் நேற்று (03) பதிவான சிசுசெரிய வகை பாடசாலை பேருந்து விபத்துக்கான விசாரணையில், சாரதி மற்றும் நடத்துனரின் கவனக்குறைவான மற்றும் அலட்சியான செயல்பாடுகளே விபத்துக்குக் காரணம் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பேருந்தின் மிதி பலகையில் இருந்த மாணவர் ஒருவர் கீழே விழுந்த சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் இது குறித்து உரிய தரப்பு கவனம் செலுத்தியுள்ளது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பேருந்தில் பணியாற்றிய சாரதி மற்றும் நடத்துனரின் சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிக்கையினூடாக தெரிவித்துள்ளது.

Face book

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Minab 168
“மினாப் 168” விமானம் : தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்த ஈரானியர்கள்!
Thaiyiddi
யாழ். தையிட்டி விகாரை காணியை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை
whatsapp number
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்க விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
Vedukkunari Mala
வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் - டக்ளஸ் எச்சரிக்கை!
canada
கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூவர் கைது
ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்