வீடொன்றில் புதைக்கப்பட்ட மனித கால்! தென்னிலங்கையில் பரபரப்பு சம்பவம்!

தென்னிலங்கையில் வீடொன்றின் பின்புறத்தில் புதைக்கப்பட்டிருந்த நபர் ஒருவரின் உடற்பாகம் (மனித கால்) ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை , வலஸ்முல்ல பகுதியிலுள்ள வீடொன்றின் பின்புறத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த மனித கால் பொலிசாரினால் நேற்று (16.07.2025) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனித கால், இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல்போன 51 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையின் உடற்பாகமாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த நபர் கொலை செய்யப்பட்டு வீட்டின் பின்புறத்தில் புதைத்திருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

காணாமல் போன நபரின் உறவினர்கள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, அவரின் வீட்டின் பின்பகுதியில் பொலிசார் தேடுதல் நடத்தியிருந்தனர்.

கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கணவனுக்கும், அவரின் மனைவிக்கும் அடிக்கடி மோதல் நிலைமை ஏற்படுத்தாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

power cut
நாடு முழுவதும் மின் தடை! விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
srilanka 2000 rupe
போலி ஆவணங்களை சமர்ப்பித்து வங்கியில் பணமோசடி
Ranil in hospital
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில்
vijay
போலி ‘likes’ காட்டி தமிழக மக்களை ஏமாற்றியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்!
News
பொது இடங்களில் வெற்றிலை எச்சில் துப்பினால் சட்ட நடவடிக்கை – அதிகபட்சம் ரூ.25,000 அபராதம்
newsss
“சாக போறேன்… சந்தோசமா?” – ஒரு மெசேஜில் முடிந்த புதுமண வாழ்க்கை!