🔴 VIDEO பிரான்சில் காட்டுத்தீ – தண்ணீர் எடுக்க முயன்ற ஹெலிகாப்டர் ஏரியில் விழுந்தது

பிரான்சின் பிரிட்டனி மாகாணம், ரோஸ்பெர்டன் நகரின் வனப்பகுதியில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியில் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், ரோஸ்பெர்டன் நகரில் உள்ள ஏரியில் இருந்து நேற்று மொரனி 29 ரக ஹெலிகாப்டர் தண்ணீரை சேகரிக்க முற்பட்டது. அப்போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் சில நொடிகள் வட்டமடைந்து பின்னர் நேரடியாக ஏரிக்குள் விழுந்தது.

இந்த விபத்தில் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

தண்ணீர் எடுக்கும் தருணத்தில் ஹெலிகாப்டரின் அடிப்பகுதி ஏரியின் நீரில் உராய்ந்ததே விபத்துக்கு காரணமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, குறித்த விபத்து சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Karu Jayasuriya
முன்னாள் சபாநாயகர் ஜனாதிபதி அநுரவுக்கு அவசர கடிதம்!
docter
மக்களை ஏமாற்றிவந்த போலி மருத்துவர்: சுற்றி வளைத்த அதிகாரிகள்
t20
யாழ்ப்பாணம் வருகிறது T20 உலகக்கிண்ணம்!
colombo
இவர் தொடர்பில் விபரம் தெரிந்தால் உடனே அழையுங்கள்!
Singer S
பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் காலமானார்!
vairamuthu
கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு!