🔴 VIDEO “கச்சதீவு… நேற்று, இன்று, நாளையும் இலங்கையினதுதான்!” – வாக்குக்காக பேசும் விஜய்!

கச்சதீவு உரிமை குறித்து இந்தியாவிலோ அல்லது இராஜதந்திர வழிகளிலோ இதுவரை எந்த மாற்றமும் இல்லை என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெளிவுபடுத்தியுள்ளார்.

இன்று (27) அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் ஊடகவியலாளர்களை சந்தித்த அமைச்சர், சமீபத்தில் இந்திய நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் கச்சதீவு குறித்துக் கூறிய கருத்துகள் தொடர்பாக விளக்கம் அளித்தார்.

“இவை எல்லாம் தேர்தல் அரசியல் சொல்லாட்சிகள் மட்டுமே. அதிகாரப்பூர்வமாக எந்த பொருத்தமும் கிடையாது” என அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தினார்.

கச்சதீவு எப்போதும் இலங்கைக்குச் சொந்தமான தீவாகவே இருந்து வருவதாகவும், அது ஒருபோதும் மாறப்போவதில்லை என்றும் அவர் உறுதியாக கூறினார்.

தென்னிந்தியாவில் தேர்தல் சூடு சூடாக நடைபெறுவதால், வேட்பாளர்கள் வாக்குகளை ஈர்க்க பல்வேறு வகையான அறிக்கைகளை வெளியிடுவது சாதாரணம் என்றும், இதுவும் அதேபோன்ற ஒரு அரசியல் முயற்சிதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“முன்பும் தேர்தல் காலங்களில் இத்தகைய கூற்றுக்கள் வந்துள்ளன. ஆனால் அவை எந்த மாற்றத்திற்கும் வழிவகுக்கவில்லை. இன்று விஜய் கூறிய கருத்தும் அதேபோலவே தான். ஆகவே இதை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை,” என்று அமைச்சர் தெரிவித்தார்.

“நேற்று, இன்று, நாளையும் கச்சதீவு இலங்கையின் பிரதேசம் தான்!” என்ற வாக்குறுதியோடு அவர் தனது உரையை முடித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Karu Jayasuriya
முன்னாள் சபாநாயகர் ஜனாதிபதி அநுரவுக்கு அவசர கடிதம்!
docter
மக்களை ஏமாற்றிவந்த போலி மருத்துவர்: சுற்றி வளைத்த அதிகாரிகள்
t20
யாழ்ப்பாணம் வருகிறது T20 உலகக்கிண்ணம்!
colombo
இவர் தொடர்பில் விபரம் தெரிந்தால் உடனே அழையுங்கள்!
Singer S
பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் காலமானார்!
vairamuthu
கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு!