கடலுக்குள் வீழ்ந்து சரக்கு விமானம் விபத்து!

ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற சரக்கு விமானமொன்று கடலுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

துருக்கி விமான சேவைக்கு (Air ACT) சொந்தமான போயிங் 747-481 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம், எமிரேட்ஸ் விமான சேவையின் EK9788 என்ற விமானப் பயணமாகத் துபாயிலிருந்து வந்துகொண்டிருந்தது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 03.50 மணியளவில், இது வடக்கு ஓடுபாதையில் தரையிறங்கும்போது, விமான நிலையத்தின் தரைப் பணியாளர்களின் வாகனத்துடன் மோதியுள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்துத் திணைக்களம் (Civil Aviation Department) வெளியிட்ட அறிக்கையின்படி, விபத்தின் காரணமாக பணியாளர்கள் இருவர் கடலில் வீழ்ந்துள்ளனர்.

அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், பின்னர் அங்கு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

vehicle
இன்று முதல் கட்டாயமாக்கப்படும் சட்டம் : வெளியான அறிவிப்பு
jaffna
யாழ். ஆலயம் ஒன்றில் பல லட்சம் ரூபா பெறுமதியான சிலைகள் திருட்டு!
father attack
கத்தோலிக்க அருட்தந்தை மீது தாக்குதல்: நீதிமன்றின் அதிரடி உத்தரவு
bus accident
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து - 80 உயிர்களைக் காத்த சாரதி
mullaitivu
புதுக்குடியிருப்பில் மாயமான இளைஞனின் தொலைபேசி மீட்பு! பொலிஸார் தீவிர விசாரணை
flight
மத்திய கிழக்கில் பதற்றம்: சில வானூர்தி சேவைகள் நிறுத்தம்