ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் மோதல்: பணிப்பெண்களை தாக்கிய வெளிநாட்டவர்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டு விமானப் பணிப்பெண்களைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக, சவுதி அரேபிய நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணித்துக் கொண்டிருந்த UL 266 விமானத்தில் பயணித்த பயணி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க தயாரான போது, ​​அனைத்து பயணிகளும் ஆசனப் பட்டிகளை அணிந்து தங்கள் இருக்கையில் அமருமாறு அறிவிக்கப்பட்ட போதும், அதனை மீறி குறித்த பயணி கழிப்பறைக்குச் செல்ல முயன்றதால், அங்கு மோதல் ஏற்பட்டது.

பின்னர் பணிப்பெண்கள் இது தொடர்பாக விமானிக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுத்தனர்.

விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, பொலிஸ் அதிகாரிகள் சந்தேகநபரான சவுதி அரேபிய நாட்டவரை கைது செய்தனர்.

மலேசியாவுக்குச் செல்லும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக வந்த 28 வயதான குறித்த சவுதி அரேபிய நாட்டவர், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

shritharan mp
"செம்மணி மனிதப் புதைகுழி தமிழ் இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சி!" நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்
buddhist monk arrested
அமெரிக்க பொலிஸாரின் 'ஒப்பரேஷன் ரெட் கார்ட்' அதிரடி: இலங்கை தேரர் உட்பட 7 பேர் கைது!
Sugeeswara Bandara
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சுகீஸ்வர பண்டார கைது!
trincomalee
திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய நிலத்தடி சிறைக்கு சீல் வைக்கப்படுகிறது!
Kankesanthurai Port
காங்கேசன்துறை துறைமுகத்தில் அதிரடி: ஸ்கேனிங் பரிசோதனையில் அம்பலமான நூதன தங்கம் கடத்தல்!
iran-us
அமெரிக்கா - ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம்: சுவிட்சர்லாந்தில் ஜூன் 19 அன்று கையெழுத்தாகிறது!