“திருகோணமலையிலுள்ள விகாரை முறையாக பதிவு செய்யப்பட்டது” ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அமரபுர மகா நிக்காயவின் தலைமை நாயக்க தேரர் கரகொட உயங்கொட மைத்திரி மூர்த்தி தேரர் ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

திருகோணமலையில் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை 1951 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருவதாகவும், குறித்த விகாரை முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டில் விகாரை அமைந்துள்ள காணியின் உரிமை அப்போதைய ஜனாதிபதியால் வழங்கப்பட்ட மானியப்பத்திரத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவரின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருகோணமலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சம்பவம் கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டும் எனவும் அமரபுர மகாநிக்காயவின் தலைமை தேரர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, இந்த விடயம் தொடர்பில் உடனடியாக ஆராயுமாறும் தலைமை தேரரால் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!