வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தப்படுத்த ரூ.10,000 வழங்க தீர்மானம்!

கொழும்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை, சுத்தப்படுத்துவதற்கு, தலா 10,000 ரூபாய் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன ஜனக்க குமார இதனை அறிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பான மதிப்பீடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாவட்ட செயலாளர் கூறியுள்ளார்.

அத்துடன், பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள பிரதேச செயலகங்களில் வழமையான சேவைகளைப் பெறுவோர் நிலைமை வழமைக்குத் திரும்பும் வரை ஏனைய பிரதேச செயலகங்களில், தங்களுக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன ஜனக்க குமார கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran
ஹோர்முஸ் நீரிணையில் கொள்கலன் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை துப்பாக்கிச் சூடு!
Suresh Saleh
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சுரேஷ் சலே நீதிமன்றில் ஆஜர்!
iran
தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும்: அமெரிக்காவிற்கு ஈரான் ராணுவம் பகிரங்க எச்சரிக்கை
suriya movie shoot
கொழும்பில் படமாக்கப்படவிருந்த இந்தியத் திரைப்படத்தில் சூர்யாவுடன் நடிக்கவிருந்த இலங்கை கலைஞர் திடீரென உயிரிழப்பு!
MT Tifani
இலங்கை கடற்பரப்புக்கு அப்பால் ஈரான் ஆதரவு கப்பல் இடைமறிப்பு: அமெரிக்கப் படைகள் அதிரடி சோதனை!
vavuniya
வவுனியாவில் இளைஞர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட குழு: பொலிசார் தீவிர விசாரணை!