பதுளையில் நேற்றிரவு மீண்டும் மண்சரிவு ஏற்பட்டமையினால் அந்தப் பகுதி மக்கள் பாதுகாப்பு தேடி தப்பிச் சென்றுள்ளனர்.
எகரிய, மீகொல்ல, மேல் பகுதியில் இன்று அதிகாலையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்தப் பகுதி மக்கள் அதிகாலை 4 மணியளவில், விளையாட்டு மைதானத்தில் ஒன்றுக் கூடியதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்களை வெளியேற்றும் முயற்சிகள் இருந்தபோதிலும், பல குடும்பங்கள் அப்பகுதியில் தங்கியிருப்பதாகவும், பாதுகாப்பு மையங்களை அடைய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்ச்சரிவு ஏற்பட்ட போதிலும், அப்பகுதியில் இருந்து எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
