போதைவஸ்து மாபியாவுடன் தொடர்பிலிருக்கும் பொலிஸார்: எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை

பொலிஸ் அதிகாரிகள் சிலரின் சொத்துக்கள் மற்றும் அவர்கள் நிதி சேகரித்த விடயங்களை விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவில் பணியாற்றும் 400 அதிகாரிகளின் சொத்துக்கள் மற்றும் விபரங்கள் விசாரிக்கப்படவுள்ளன.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுவதாகச் சந்தேகிக்கப்படும் பொலிஸ் அதிகாரிகள் சிலர், திடீரென கோடீஸ்வரர்களாக மாறியுள்ளதாக கிடைத்துள்ள இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில், ஐந்து பிரதி பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் 20 அதிகாரிகளின் சொத்து விபரங்கள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிலர் இந்த பிரிவில் 20 முதல் 25 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும், அவர்களில் பலர் உரிய முறையில் சேவையை செய்வதில்லை எனவும் தெரியவந்துள்ளது.நீண்ட காலமாக ஒரே பிரிவில் பணிபுரியும் சில அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாகவும், விசாரணைகள் தொடர்பான அனைத்து தகவல்களும் இவர்கள் மூலமாகவே கடத்தல்காரர்களுக்கு அனுப்பப்படுவதாகவும் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

university of jaffna
யாழ். பல்கலைக்கழகத்தின் பெயர் பலகையில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!
tvk
ஆளுநருக்கு எதிராக தமிழகம் தழுவிய போராட்டம்: நாளை களம் இறங்குகிறது காங்கிரஸ்!
1144
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உண்டியல் உடைப்பு: 21 இலட்சம் ரூபாயுடன் இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் கைது!
tvk
தவெகவை ஆட்சியமைக்க அழைக்காவிட்டால் போராட்டம்: ஆளுநருக்கு தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் எச்சரிக்கை.
chandrika bandaranaike
விஜய்க்கு வாழ்த்து மடல் அனுப்பிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா!
katchatheevu
விஜய் கச்சத்தீவையும் கொண்டு சென்றுவிடுவாரோ தெரியவில்லை? நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்