வட்டிப் பண முரண்பாட்டால் அரங்கேறிய கொடூரம்!

அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் குடும்ப பெண் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொடூர சம்பவம் அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் நேற்று (4 ) இடம்பெற்றுள்ளது.

மேற்படி பெண்ணின் கணவர் நேற்று கூலி வேலைக்கு சென்ற நிலையில், மூன்று பிள்ளைகளுடன் வீட்டிலிருந்த தாயாரான 46 வயது பெண் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மாலை 5 மணியளவில் கத்தியுடன் வீட்டுக்கு வந்த உறவினரான ஆண் ஒருவர், வட்டிப் பணம் தொடர்பில் பெண்ணுடன் முரண்பட்டு கத்தியால் பெண்ணின் நெஞ்சில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதன்போது உயிருக்கு போராடிய குறித்த பெண்ணை அயலவர்கள் உடனே வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

எனினும், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிறிது நேரத்தில் பெண் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் 42 வயது நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவரிடமும், பிள்ளைகளிடமும் வாக்குமூலங்களைப் பெற்று மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!