முன்னாள் ஜனாதிபதி ரணிலின் மற்றுமொரு மோசடி அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மோசடியாக வழங்கிய ஐந்து ஏக்கர் காணியை அரசு திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழுள்ள விகாரகல தோட்டத்திற்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் காணியை, விடுமுறை விடுதி கட்டுவதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு (GMOA) குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காணி உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாமல் கைமாற்றப்பட்டுள்ளது.மேலும் குத்தகை நிபந்தனைகளும் மீறப்பட்டதால், காணியை மீள கையகப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் காணி (24.05.2023) அன்று குத்தகை பத்திரம் மூலம் 30 வருட காலத்திற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

ஏக்கருக்கு சுமார் (50,000) ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பீட்டில் குத்தகைக்கு விடப்பட்ட இந்தக் காணி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குத்தகை விதிமுறைகளை பூர்த்திச் செய்யத் தவறியதால், சமீபத்தில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காணி அமைந்துள்ள பகுதி, தியலும நீர்வீழ்ச்சி உட்பட பல முக்கிய சுற்றுலா தலங்களுக்கு அருகில் அமைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran
ஹோர்முஸ் நீரிணையில் கொள்கலன் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை துப்பாக்கிச் சூடு!
Suresh Saleh
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சுரேஷ் சலே நீதிமன்றில் ஆஜர்!
iran
தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும்: அமெரிக்காவிற்கு ஈரான் ராணுவம் பகிரங்க எச்சரிக்கை
suriya movie shoot
கொழும்பில் படமாக்கப்படவிருந்த இந்தியத் திரைப்படத்தில் சூர்யாவுடன் நடிக்கவிருந்த இலங்கை கலைஞர் திடீரென உயிரிழப்பு!
MT Tifani
இலங்கை கடற்பரப்புக்கு அப்பால் ஈரான் ஆதரவு கப்பல் இடைமறிப்பு: அமெரிக்கப் படைகள் அதிரடி சோதனை!
vavuniya
வவுனியாவில் இளைஞர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட குழு: பொலிசார் தீவிர விசாரணை!