அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரையும், மேலதிக விசாரணைக்காக நாளை (18) வரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கு கடுவெல நீதவான் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
நவகமுவ பகுதியினை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் நேற்று (16) பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் பல முக்கிய தகவல்களை வெளியிட்டிருந்தனர்.
இருப்பினும், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், கரந்தெனிய சுத்தாவின் அறிவுறுத்தலின் பேரில் டுபாய் நிபுன மற்றும் மல்வானை டுட்டு ஆகியோர் கொலையைத் திட்டமிட்டனர் என்பது தெரியவந்தது.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட இளைஞர்களில் ஒருவர், தாங்கள் வந்த காரிலிருந்து ஒரு பையை எடுத்து வந்து துப்பாக்கிதாரிகள் இருந்த காரில் ஒப்படைப்பதைக் காட்டும் சிசிடிவி காட்சிகளும் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த சட்டத்தரணியும் அந்த வீதி வழியாக வந்துள்ள நிலையில், கைது செய்யப்பட்ட இருவரும் அது குறித்துத் துப்பாக்கிதாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மதியம் தலங்கம, அக்குரேகொடவில் அமைந்துள்ள சுப்பர் மார்க்கெட் வாகன தரிப்பிடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.
சம்பவம் குறித்து விசாரிக்க ஐஜிபியின் அறிவுறுத்தலின் பேரில் 12 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
