ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் – நீதவான் பிறப்பித்த அதிரடி உத்தரவு

காலி தேசிய மருத்துவமனையில் இரண்டு நடமாடும் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டுள்ள 84 ஈரானிய மாலுமிகளின் உடலங்களை ஈரான் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு காலி பிரதான நீதவான் சமீர தொடங்கொட இன்று (11) காலை உத்தரவிட்டுள்ளார்.

காலி தேசிய மருத்துவமனையின் பணிப்பாளருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காலித் துறைமுக காவல்துறையினர் காலி பிரதான நீதவான் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கையினைப் பரிசீலித்த நீதவான், இந்த விசேட கட்டளையை பிறப்பித்துள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் கடல்சார் விபத்துக்கள் காரணமாக உயிரிழந்த இந்த மாலுமிகளின் உடலங்கள், மேலதிக சட்ட நடைமுறைகளின் பின்னர் அவர்களின் தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!