ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் – நீதவான் பிறப்பித்த அதிரடி உத்தரவு

காலி தேசிய மருத்துவமனையில் இரண்டு நடமாடும் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டுள்ள 84 ஈரானிய மாலுமிகளின் உடலங்களை ஈரான் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு காலி பிரதான நீதவான் சமீர தொடங்கொட இன்று (11) காலை உத்தரவிட்டுள்ளார்.

காலி தேசிய மருத்துவமனையின் பணிப்பாளருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காலித் துறைமுக காவல்துறையினர் காலி பிரதான நீதவான் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கையினைப் பரிசீலித்த நீதவான், இந்த விசேட கட்டளையை பிறப்பித்துள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் கடல்சார் விபத்துக்கள் காரணமாக உயிரிழந்த இந்த மாலுமிகளின் உடலங்கள், மேலதிக சட்ட நடைமுறைகளின் பின்னர் அவர்களின் தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran
ஹோர்முஸ் நீரிணையில் கொள்கலன் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை துப்பாக்கிச் சூடு!
Suresh Saleh
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சுரேஷ் சலே நீதிமன்றில் ஆஜர்!
iran
தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும்: அமெரிக்காவிற்கு ஈரான் ராணுவம் பகிரங்க எச்சரிக்கை
suriya movie shoot
கொழும்பில் படமாக்கப்படவிருந்த இந்தியத் திரைப்படத்தில் சூர்யாவுடன் நடிக்கவிருந்த இலங்கை கலைஞர் திடீரென உயிரிழப்பு!
MT Tifani
இலங்கை கடற்பரப்புக்கு அப்பால் ஈரான் ஆதரவு கப்பல் இடைமறிப்பு: அமெரிக்கப் படைகள் அதிரடி சோதனை!
vavuniya
வவுனியாவில் இளைஞர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட குழு: பொலிசார் தீவிர விசாரணை!