இந்தியாவிடம் இருந்து டீசலைக் கோரும் இலங்கை!

இலங்கை, வங்கதேசம் மற்றும் மாலத்தீவு உள்ளிட்ட அண்டை நாடுகளிடமிருந்து டீசல் விநியோகத்திற்கான கோரிக்கைகளை இந்தியா ஆராய்ந்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில் , இந்தியா சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை, குறிப்பாக அதன் அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஒரு முக்கிய நாடாகும்.

வங்கதேசம் டீசல் விநியோகத்தை கோரியுள்ளதாகவும், இந்த விஷயம் தற்போது பரிசீலனையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2017 ஆம் ஆண்டு முதல் வங்கதேசத்திற்கான டீசல் ஏற்றுமதி பெரும்பாலும் தொடர்கிறது என்றாலும், இந்தியாவின் சுத்திகரிப்பு திறன், உள்நாட்டு தேவைகள் மற்றும் எரிபொருள் கிடைக்கும் தன்மையைக் கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்படும் என்று ஜெய்ஸ்வால் மேலும் கூறினார்.

இந்தியாவின் எரிசக்தித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இலங்கை மற்றும் மாலத்தீவுகளின் இதேபோன்ற கோரிக்கைகளும் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Harshana Nanayakkara
செம்மணி புதைக்குழி: உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி – நீதி அமைச்சர்!
australia
"தற்காப்பு எனக்கூறி தலையில் தாக்குவதா?" — இலங்கை வம்சாவளி இளைஞருக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் சிறை தண்டனை!
anura
அரச செலவைக் குறைக்க நடவடிக்கை: 5 ஜனாதிபதி மாளிகைகள் சுற்றுலாத்துறைக்குக் குத்தகைக்கு!
ShakthiSAT
ShakthiSAT சர்வதேச விண்வெளி திட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 18 வயது மாணவி!
vavuniya
வவுனியாவில் சோகம்: ஊஞ்சல் தடி முறிந்து விழுந்து 5 மாதக் குழந்தை பரிதாப பலி!
Chaminda Wijesiri
2019 பண்டாரவளை பொலிஸ் மோதல் வழக்கு: பதுளை எம்.பி சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை!