உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது சுரேஷ் சலே இலங்கையில் இல்லை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில், முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே இலங்கையில் இருக்கவில்லை எனவும், அந்த நேரத்தில் அவர் புலனாய்வுத் துறையின் தலைவராகப் பணியாற்றவில்லை எனவும் சட்டத்தரணி சஞ்ஜீவ சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

சுரேஷ் சலே 2016 ஆம் ஆண்டு இலங்கையை விட்டு வெளியேறியதுடன், மீண்டும் 2018 டிசம்பர் மாதத்திலேயே நாட்டிற்குத் திரும்பினார்.

அத்தோடு 2019 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில், அவர் இந்தியாவில் உள்ள பாதுகாப்புப் படைகளின் பதவி நிலை கல்லூரியில் (Defence Services Staff College) இராணுவப் பயிற்சியினைப் பெற்றுக்கொண்டிருந்தார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரே சுரேஷ் சலே மீண்டும் இலங்கை திரும்பினார். அதன் பின்னரே அவர் அரச புலனாய்வுச் சேவையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று முடிந்த பின்னரே அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்பதை சட்டத்தரணி சஞ்ஜீவ சமரவிக்ரம இதன்போது சுட்டிக்காட்டினார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Harshana Nanayakkara
செம்மணி புதைக்குழி: உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி – நீதி அமைச்சர்!
australia
"தற்காப்பு எனக்கூறி தலையில் தாக்குவதா?" — இலங்கை வம்சாவளி இளைஞருக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் சிறை தண்டனை!
anura
அரச செலவைக் குறைக்க நடவடிக்கை: 5 ஜனாதிபதி மாளிகைகள் சுற்றுலாத்துறைக்குக் குத்தகைக்கு!
ShakthiSAT
ShakthiSAT சர்வதேச விண்வெளி திட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 18 வயது மாணவி!
vavuniya
வவுனியாவில் சோகம்: ஊஞ்சல் தடி முறிந்து விழுந்து 5 மாதக் குழந்தை பரிதாப பலி!
Chaminda Wijesiri
2019 பண்டாரவளை பொலிஸ் மோதல் வழக்கு: பதுளை எம்.பி சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை!