இருபதுக்கு20 உலகச் செம்பியனான இந்தியக் கிரிக்கெட் அணி, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கையில் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு20 தொடரில் விளையாடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண நிதியைத் திரட்டும் நோக்கில் இந்தத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக Cricbuzz இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக, ஓகஸ்ட் மாதம் இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து, இந்த இருபதுக்கு20 தொடர் இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் குறித்து இதுவரை இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை.
