உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது சுரேஷ் சலே இலங்கையில் இல்லை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில், முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே இலங்கையில் இருக்கவில்லை எனவும், அந்த நேரத்தில் அவர் புலனாய்வுத் துறையின் தலைவராகப் பணியாற்றவில்லை எனவும் சட்டத்தரணி சஞ்ஜீவ சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

சுரேஷ் சலே 2016 ஆம் ஆண்டு இலங்கையை விட்டு வெளியேறியதுடன், மீண்டும் 2018 டிசம்பர் மாதத்திலேயே நாட்டிற்குத் திரும்பினார்.

அத்தோடு 2019 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில், அவர் இந்தியாவில் உள்ள பாதுகாப்புப் படைகளின் பதவி நிலை கல்லூரியில் (Defence Services Staff College) இராணுவப் பயிற்சியினைப் பெற்றுக்கொண்டிருந்தார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரே சுரேஷ் சலே மீண்டும் இலங்கை திரும்பினார். அதன் பின்னரே அவர் அரச புலனாய்வுச் சேவையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று முடிந்த பின்னரே அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்பதை சட்டத்தரணி சஞ்ஜீவ சமரவிக்ரம இதன்போது சுட்டிக்காட்டினார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Minister Nalinda Jayatissa
போராட்டங்களால் CID விசாரணைகளைத் தடுக்க முடியாது – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!
சுரேஷ் சலே
தீவிரம் அடையும் சுரேஷ் சலே விசாரணை: CID அதிகாரிகளை நேரில் முன்னிலையாக மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
kilinochchi
முறையற்ற மின் இணைப்பு உயிரைப் பறித்தது: கிளிநொச்சியை சேர்ந்த இளைஞன் பலி!
court judgement
வங்கி கடனுக்காக மகனுக்கு மாற்றப்பட்ட வீடு: 30 வருடங்களின் பின் தாய்க்கு கிடைத்த நீதி!
sarana gunawardena
சரத் குணவர்தனவுக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறை; கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
weather
மணிக்கு 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!