புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து எஸ். சதீஸ்தரனிடம் வழங்கினார்.
முன்னதாக இவர் சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது இந்த உயர்வு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நீதித்துறை சார்ந்து இயங்கும் சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
