லங்கா ஐஓசி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கையின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதாகவும் லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த அந்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கே. ரகு இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;

“லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் என்ற ரீதியில், எரிபொருள் விநியோகத்தை நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என்பதை மக்களுக்கு கூற விரும்புகிறேன். நாட்டிற்கு மிகவும் அவசியமான வலுசக்தி பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.

தற்போதைய நிலைமை மிகவும் சிறப்பாக இருப்பதாக நான் கூறவில்லை. எவ்வாறாயினும், நாட்டுக்குள் எரிபொருள் விநியோகத்தை சீராகப் பேணுவதற்காக லங்கா ஐஓசி நிறுவனமும் அரசாங்கமும் தங்களால் இயன்ற உச்சகட்ட முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.

நாட்டின் முன்னேற்றத்திற்காக நாங்கள் தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகிப்போம்” எனத் தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

yala national park
யால சரணாலயத்தில் விதிகளை மீறி அட்டகாசம்: 5 சுற்றுலாப் பயணிகள் அதிரடி கைது!
vijay sangeetha divorce
தமிழக முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஓகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
batti news
வாழைச்சேனையில் விசித்திரம்: திருடிய மோட்டார் சைக்கிளை உரிய வீட்டிலேயே கொண்டு வந்து ஒப்படைத்த திருடர்கள்!
2019 easter attack
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் அரசியல் தலைவர் விரைவில் கைது?
தமிழரசுக் கட்சி
தமிழரசுக் கட்சியில் வெடித்தது புதிய சர்ச்சை: யாழ் மாவட்ட புதிய நிர்வாகத் தெரிவுக்கு எதிராக இளைஞர் அணித் தலைவர் கடிதம்!
சங்கீத்சன்
சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் பிணையில் விடுதலை!