காபூல்:ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதைப்பொருள் ஒழிப்பு சிகிச்சை மையம் (Omid Hospital) மீது பாகிஸ்தான் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், 400 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தலிபான் அரசு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே நிலவி வரும் போர்ப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

சம்பவத்தின் விபரம்
திங்கட்கிழமை (16) இரவு 9 மணியளவில் காபூலில் உள்ள 2,000 படுக்கைகள் கொண்ட மிகப்பெரிய போதைப்பொருள் ஒழிப்பு மருத்துவமனை மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டுகளை வீசின. இதில் மருத்துவமனையின் பெரும் பகுதி தரைமட்டமானதுடன், பாரிய தீப்பரவலும் ஏற்பட்டது.தலிபான் அரசின் பேச்சாளர் ஹம்துல்லா பித்ரத் (Hamdullah Fitrat) தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரை 400 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் ஆவர்.
BREAKING: More videos from tonight's Pakistani airstrikes which hit a drug rehabilitation hospital in Kabul, killing or wounding an unspecified number of people, according to an Afghan Taliban spokesperson.
— Yalda Hakim (@SkyYaldaHakim) March 16, 2026
Pakistan’s government rejects this, claiming they targeted "military… pic.twitter.com/GtRmnicTLW
பரஸ்பர குற்றச்சாட்டுகள்
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாங்கள் மருத்துவமனையை இலக்கு வைக்கவில்லை என்றும், காபூல் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களில் உள்ள “பயங்கரவாத உள்கட்டமைப்புகளை” மட்டுமே துல்லியமாகத் தாக்கியதாகவும் கூறியுள்ளது. ஆனால், மருத்துவமனைக்கு அருகில் எந்தவொரு இராணுவ இலக்குகளும் இல்லை என ஆப்கான் சுகாதார அமைச்சகம் இதனை மறுத்துள்ளது.
பின்னணி மற்றும் சர்வதேச கவலை
கடந்த பிப்ரவரி மாதம் முதல் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைகளில் மோதல் தீவிரமடைந்துள்ளது. பாகிஸ்தான் இதனை “திறந்த போர்” (Open War) என வர்ணித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை (UNAMA) மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இந்தச் சிவிலியன் உயிரிழப்புகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.சீனா மற்றும் கட்டார் போன்ற நாடுகள் இரு தரப்புக்கும் இடையே சமரசம் செய்ய முயற்சித்து வரும் நிலையில், இந்தத் தாக்குதல் போர் நிறுத்த முயற்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
This is a morning video of a hospital in Kabul after Pakistan's air strike. The video shows that the hospital has suffered a lot of damage.#airstrike #Taliban pic.twitter.com/x9O2PRednG
— mr. ᴩᴀᴛʜᴀᴋ (@mr_pathakshiv) March 17, 2026
