QR ஒதுக்கீடுகள் தொடர்பில் வெளியான தகவல்: வாகன உரிமையாளர்கள் கவனத்திற்கு!

தற்போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு எதிர்வரும் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைவதுடன், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் புதுப்பிக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்துள்ளார்.

கியூ.ஆர். குறியீடு முறைமையை அறிமுகப்படுத்தியதன் மூலம் நாட்டின் எரிபொருள் நுகர்வை 20 வீதத்தினால் குறைக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

இலங்கையில் தற்போது ஒரு நாளைக்கு சராசரியாக 4,800 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 4,045 மெட்ரிக் தொன் பெட்ரோல் நுகரப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலவும் நீண்ட வரிசைகளை உடனடியாகக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த கியூ.ஆர். முறைமை அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

மார்ச் மாதத்தில் கிடைக்கவுள்ள மற்றும் தற்போது கையிருப்பிலுள்ள எரிபொருளின் அடிப்படையில், எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரம் வரை போதுமான எரிபொருள் உள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran
ஹோர்முஸ் நீரிணையில் கொள்கலன் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை துப்பாக்கிச் சூடு!
Suresh Saleh
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சுரேஷ் சலே நீதிமன்றில் ஆஜர்!
iran
தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும்: அமெரிக்காவிற்கு ஈரான் ராணுவம் பகிரங்க எச்சரிக்கை
suriya movie shoot
கொழும்பில் படமாக்கப்படவிருந்த இந்தியத் திரைப்படத்தில் சூர்யாவுடன் நடிக்கவிருந்த இலங்கை கலைஞர் திடீரென உயிரிழப்பு!
MT Tifani
இலங்கை கடற்பரப்புக்கு அப்பால் ஈரான் ஆதரவு கப்பல் இடைமறிப்பு: அமெரிக்கப் படைகள் அதிரடி சோதனை!
vavuniya
வவுனியாவில் இளைஞர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட குழு: பொலிசார் தீவிர விசாரணை!