உத்தியோகபூர்வ இலக்கத்தகடு இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு எரிபொருள் பெற விசேட அறிவுறுத்தல்!

உத்தியோகபூர்வ வாகன இலக்கத்தகடு பெறாத வாகன உரிமையாளர்கள், எரிபொருள் நிரப்பும்போது தங்கள் அடையாளத்தைச் சரிபார்ப்பதற்காக வருமான வரி உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ், காப்புறுதி அல்லது வாகனப் புகைப் பரிசோதனைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டுமென மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைய எரிபொருள் விநியோகிக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

கொள்முதல் நடவடிக்கைகளில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் கடந்த காலங்களில் உத்தியோகபூர்வ வாகன இலக்கத் தகடுகள் விநியோகிக்கப்படவில்லை.

இதன் காரணமாகச் சில வாகன உரிமையாளர்கள் பல்வேறு வகையான இலக்கத் தகடுகளைப் பயன்படுத்த முற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே, எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும்போது வாகனத்தின் அடையாளத்தைத் துல்லியமாக உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, தேவையான சந்தர்ப்பங்களில் குறித்த ஆவணங்களில் ஒன்றினைச் சமர்ப்பிக்குமாறு வாகன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

lanka ioc
லங்கா ஐஓசி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!
kim jong un
மர்ம பொருளை ஏவி சோதனை நடத்திய வடகொரியா: எழுந்துள்ள குற்றச்சாட்டு!
fuel
இலங்கை ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளைப் பெற அவசர சந்திப்பு
anura
மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம்!
indian cricket team
டிட்வா நிவாரண திட்டத்திற்காக இலங்கையுடன் கைகோர்க்கும் இந்திய கிரிக்கெட் அணி
Suresh Saleh
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது சுரேஷ் சலே இலங்கையில் இல்லை!