கியூ.ஆர் இன்றி எரிபொருள் வழங்க 3,000 ரூபா: நாடாளுமன்றத்தில் அம்பலமான தகவல்

திம்பிரிகஸ்யாய பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில், கியூ.ஆர். குறியீடு இன்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வாகன உரிமையாளர் ஒருவரிடம் 3,000 ரூபா பணம் கோரப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.டி.சூரியபண்டார இன்று (19) சபையில் தெரிவித்தார்.

இந்த முறைகேடு குறித்து அவர் நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

இதற்குப் பதிலளித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க,

இவ்வாறான முறைகேடுகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் எப்போதும் உள்ளன என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

எனினும், கியூ.ஆர். குறியீடு தொடர்பான அனைத்து தொழில்நுட்பப் பிரச்சினைகளும் தற்போது தீர்க்கப்பட்டு வருவதால், இன்றைய தினத்திலிருந்து இவ்வாறான மோசடிகளுக்கு இடமிருக்காது என அவர் உறுதியளித்தார்.

கியூ.ஆர். முறைமை முழுமையாகச் சீரடைந்தவுடன், இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் எரிபொருள் நிலையங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

India iran war
வதந்தி பரப்பியதாக அமீரகத்தில் 19 இந்தியர்கள் கைது: கடும் எச்சரிக்கை
iran
ஹோர்முஸ் நீரிணை: ஈரான் விடுத்துள்ள புதிய எச்சரிக்கை
vehicle import sri lanka
QR முறையினால் வாகன இறக்குமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
qr code
QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருள் விநியோகம்!
fuel qr code
எரிபொருள் ஒதுக்கீடு போதாது: விடுக்கப்பட்டுள்ள போராட்ட எச்சரிக்கை!
iran
இந்தியப் பெருங்கடலில் போர்க்கப்பல் மீதான தாக்குதல் - பதிலடிக்கு தயாராகும் ஈரான்