தென்னிலங்கையில் ரூ.10 இலட்சம் லொத்தர் பரிசைப் பெற்றுத் வீடு திரும்பியவர் விபத்தில் மரணம்!

தென்னிலங்கையில் லொத்தர் சீட்டிழுப்பில் 10 லட்சம் ரூபாய் பணப்பரிசை வென்ற இளைஞன், குறித்த பணத்துடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

ஹொரண – பொக்குணுவிட்ட, வெலிகம்பிட்டிய பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் கிரியெல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சண்முகம் ஆனந்த என்பவரே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் தனது நண்பரான 24 வயதுடைய இளைஞனுடன் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

குறித்த இருவரும் கொழும்பில் இருந்து ஹொரண நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த பாலத்தின் மதிலுடன் மோதியுள்ளது.

மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டதில் பின்னால் அமர்ந்து சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 24 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

covid 19
மீண்டும் பரவும் கொவிட்-19 பாதிப்பு: நான்கு பேர் உயிரிழப்பு
Ragitha Rajapaksa
விஜயதாசவின் புதல்வர் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரினதும் விளக்கமறியல் நீடிப்பு!
jaffna kings
விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு: Jaffna கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் கைது!
ramanathan archchuna
அருச்சுனா கூட்டத்தில் வெளியேற்றப்பட்டமை தவறு - ரஜீவன் எம்.பி தெரிவிப்பு!
archchcuna
கிளிநொச்சி கூட்டத்தில் நாகரீகமற்ற முறையில் நடந்துகொண்டது யார்?
Former IGP C.D
ராஜபக்சாக்களின் நிழலாக இருந்த முன்னாள் IGP சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!