இஸ்ரேல் மற்றும் லெபனான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், இரு நாட்டுத் தலைவர்களும் நாளை நேரில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

தனது ‘Truth Social’ தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், இஸ்ரேல் மற்றும் லெபனான் தலைவர்களுக்கு இடையே ஒரு சுமுகமான சூழலை உருவாக்கத் தான் முயற்சி எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சுமார் 34 ஆண்டுகளாக இரு நாட்டுத் தலைவர்களும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாத நிலையில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு நாளை நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே ஒரு நிம்மதியான சூழலை உருவாக்க நான் முயன்று வருகிறேன். நாளை அந்தச் சந்திப்பு நடக்கும்” என ட்ரம்ப் அந்தப் பதிவில் உறுதிபடக் கூறியுள்ளார்.
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ட்ரம்ப்பின் இந்த அதிரடித் தூதரக நகர்வு அமைதிக்கான ஒரு முக்கிய தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பு எங்கு நடைபெறும் மற்றும் இதில் என்னென்ன முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்பது குறித்து உலக நாடுகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன.
