மத்திய கிழக்கில் போர் மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர், கச்சா எண்ணெயுடன் வரும் முதலாவது கப்பல் நாளை நாட்டுக்கு!

மத்திய கிழக்கில் போர் மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர், கச்சா எண்ணெயுடன் வரும் முதலாவது கப்பல் நாளை (17) நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கப்பல் மூலம் 97,500 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக அதன் முகாமை பணிப்பாளர் கலாநிதி மயூரா நெத்திகுமார தெரிவித்தார்.

அத்துடன், இம்மாத இறுதியில் மற்றுமொரு கப்பலும் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“யுத்த நிலைமையின் பின்னர் இலங்கைக்கு வரும் கச்சா எண்ணெய் கப்பல் 97,500 மெட்ரிக் தொன் எண்ணெயுடன் நாட்டை வந்தடைகிறது. அதேபோல் இம்மாத இறுதியில் மற்றுமொரு கப்பலும் வரவுள்ளது. அத்துடன் அமெரிக்காவிலிருந்து வரும் WTI கச்சா எண்ணெய் கப்பலில் தற்போது எண்ணெய் ஏற்றப்பட்டு வருகின்றது. அது இன்றைய தின அளவில் இலங்கையை நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்கும். இதன் மூலம் இதுவரை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு பிரச்சினையாக இருந்த கச்சா எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்துவதில் இருந்த சிக்கல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!