சர்ச்சைக்குரிய திருகோணமலை விகாரை வழக்கு: விசாரணைகள் முடிவுக்கு வந்தன

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியை இடித்து அகற்றுமாறு கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி அதன் விகாராதிபதி தாக்கல் செய்திருந்த ரிட் மனு மீதான விசாரணை இன்று (28) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிறைவு செய்யப்பட்டது.

குறித்த விகாரையின் விகாராதிபதி திருகோணமலையின் கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். தம்மிக கணேபொல மற்றும் ஆதித்ய பட்டபெந்திகே ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.

இதன்போது முன்னிலையான அரச சட்டத்தரணி, கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் வழங்கிய அனுமதிப் பத்திரத்திற்கு இணங்க, குறித்த கட்டிடத்தின் சட்டவிரோதக் கட்டுமானங்களை மனுதாரரான தேரர் அகற்றியுள்ளதால், அவருக்கு எதிராக மேலதிக நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சுசந்த பாலபட்டபெந்திகே, எதிர்மனுதாரர் தரப்பின் இந்த அறிவிப்புத் தொடர்பில் திருப்தியடைவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதற்கமைய, மனு மீதான விசாரணையை நிறைவு செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran
ஹோர்முஸ் நீரிணையில் கொள்கலன் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை துப்பாக்கிச் சூடு!
Suresh Saleh
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சுரேஷ் சலே நீதிமன்றில் ஆஜர்!
iran
தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும்: அமெரிக்காவிற்கு ஈரான் ராணுவம் பகிரங்க எச்சரிக்கை
suriya movie shoot
கொழும்பில் படமாக்கப்படவிருந்த இந்தியத் திரைப்படத்தில் சூர்யாவுடன் நடிக்கவிருந்த இலங்கை கலைஞர் திடீரென உயிரிழப்பு!
MT Tifani
இலங்கை கடற்பரப்புக்கு அப்பால் ஈரான் ஆதரவு கப்பல் இடைமறிப்பு: அமெரிக்கப் படைகள் அதிரடி சோதனை!
vavuniya
வவுனியாவில் இளைஞர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட குழு: பொலிசார் தீவிர விசாரணை!