யாழ். நாகர்கோவில் – நாச்சிமார் ஆலய பகுதியில் இருந்து முன்னறிவிப்பின்றி வெளியேறிய இராணுவம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற நாச்சிமார் ஆலய வளாகத்திலிருந்து இராணுவத்தினர் முழுமையாக வெளியேறியுள்ளனர்.

கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த ஆலயப்பகுதியிலிருந்து, இராணுவத்தினர் எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புகளுமின்றி திடீரென நேற்று (27) வெளியேறியுள்ளனர்.

இராணுவத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, நீண்ட காலத்தின் பின்னர் அப்பகுதிக்குச் சென்ற பக்தர்கள் தற்போது ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

இருப்பினும், ஆலயத்திலிருந்து வெளியேறிய இராணுவத்தினர், அங்கிருந்த அனைத்துக் கட்டடங்களையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டுச் சென்றுள்ளதாகப் பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

25 ஆண்டுகால ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தாலும், ஆலய வளாகத்திலிருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டமை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
திருகோணமலையில் பிரசவத்தின் போது சிசு மரணம்: இரு வைத்தியர்கள் பணி இடைநீக்கம்!
vijay
மு.க. ஸ்டாலினைச் சந்திக்கிறார் தமிழக முதல்வர் விஜய்: அதிரும் தமிழக அரசியல்!
may 18
நினைவுகளே எமது பேராயுதம்; தமிழ்த் தேசிய உணர்வே எமது பலம்: தமிழ் சிவில் சமூக அமையம் அறைகூவல்!
may 18
தமிழ் நாட்டு சட்டசபையில் மே 18ஐ முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக நிறைவேற்றுமாறு கோரிக்கை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
tvk
விசிக-வின் அதிரடி முடிவை நோக்கித் தமிழகம்! தமிழக அரசியல் களத்தில் இறுதி நிமிடப் பரபரப்பு!
vijay tvk
"பதவிக்காக யார் காலிலும் விழமாட்டேன்!"- அதிரடி முடிவெடுக்கிறாரா விஜய்? ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறி!