வவுனியாவில் அதிர்ச்சி: இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு 3 மணி நேரத்தின் பின் தாக்கப்பட்டு விடுவிப்பு!

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டு மூன்று மணி நேரத்தின் பின் விடுவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்காக நேற்று (07.05) பிற்பகல் 3 மணியளவில் பேரூந்து ஒன்றில் ஏறி தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரிடம் இருந்து முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கைத் தொலைபேசியை பறித்துக் கொண்டு பேரூந்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.

இதன்போது அங்கு நின்ற முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் சிலர் குறித்த இளம் குடும்பஸ்தரை முச்சக்கர வண்டியில் ஏறுமாறு கூறி ஏற்றிக் கொண்டு வவுனியா, புதிய பேரூந்து நிலையத்திற்கும், சோயா வீதிக்கும் இடையிலுள்ள வயல் வெளி பகுதிக்கு அழைத்து சென்று தன்னை தாக்கியதுடன், அவர்களால எழுதப்பட்ட கடிதம் ஒன்றில் கையொப்பமும் பெற்றதாகவும், தொலைபேசியில் இருந்த சில ஆவணங்களும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின் மாலை 6.30 இற்கு பின்னர் தன்னை விடுவித்ததாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பில வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
கிளிநொச்சியில் இளம் கலைஞர் கைது: அரசின் இரட்டை நிலைப்பாட்டைச் சாடும் நாமல் ராஜபக்ஷ!
vavuniya
மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்: வவுனியா 'சிறுவர் பாதாளக் குழு' சிக்கியது! 7 பேருக்கு நீதிமன்ற உத்தரவால் சிறுவர் இல்லத்தில் அடைப்பு!
arrest
எழுச்சி பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் பகிர்ந்த கிளிநொச்சி சொல்லிசை கலைஞன் கைது!
vavuniya accident
கனகராயன் குளத்தில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் உயிரிழப்பு.!
chennai srilankan girl death
சென்னை கோயம்பேடு கொடூரம்: காரில் மோதி இலங்கை பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுமியும் பலி
gotabaya rajapaksa
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் - கோட்டாபய உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத்தடை