உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – கோட்டாபய உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத்தடை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பயணத் தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

அவருடன் இணைத்து மேலும் இரு உயர் இராணுவ அதிகாரிகளுக்கும் இவ்வாறு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவ கர்னல் அதிகாரி முகமது அன்சார் மற்றும் சில்வா என அழைக்கப்படும் முன்னாள் புலனாய்வு அதிகாரியான பிரேமானந்த உடலகம ஆகியோருக்கே இவ்வாறு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக குறித்த மூவருக்கும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் உயர் இராணுவ அதிகாரிகள் இருவர் உள்ளடங்களாக மூவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் பயணத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

hatton
ஹட்டன் டிக்கோயா இரட்டைக் கொலையாளி இன்று அதிகாலை தப்பியோட்டம்!
arrest
3 வருடங்களுக்கு முன் நடந்த இரட்டைக் கொலை: தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் கைது
jaffna news
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் ஆராய்வு!
arrest
19 நாட்களேயான கைக்குழந்தையை 1 லட்சத்திற்கு விற்க முயன்ற 6 பேர் கைது!
death
கல்விச் சுற்றுலாவில் நேர்ந்த பெரும் சோகம்: மாணவியைக் காப்பாற்ற முயன்ற கணித ஆசிரியர் உயிரிழப்பு!
iran
தெற்கு ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!