உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – கோட்டாபய உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத்தடை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பயணத் தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

அவருடன் இணைத்து மேலும் இரு உயர் இராணுவ அதிகாரிகளுக்கும் இவ்வாறு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவ கர்னல் அதிகாரி முகமது அன்சார் மற்றும் சில்வா என அழைக்கப்படும் முன்னாள் புலனாய்வு அதிகாரியான பிரேமானந்த உடலகம ஆகியோருக்கே இவ்வாறு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக குறித்த மூவருக்கும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் உயர் இராணுவ அதிகாரிகள் இருவர் உள்ளடங்களாக மூவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் பயணத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

buddhist monk
மீண்டும் ஒரு சர்ச்சை: கண்டியில் 15 வயது சிறுமியை தகாத நடத்தைக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு கைது!
sri lankan girl death in chennai
சென்னையில் கொடூரம்: இலங்கை பெண் கொலை வழக்கில் 7 பேர் அதிரடி கைது!
archuna ramanathan
நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் எம்.பி அர்ச்சுனாவிற்கு எதிரான வழக்கு: ஜூன் 19 இல் விசாரணை!
Harshana Nanayakkara
தமிழர்களுக்கான புதிய அரசமைப்பு உறுதி : அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
mannar
சிறப்பாக இடம்பெற்று வரும் வள்ளுவர் வெற்றிக் கிண்ணம் - 2026!
actor ajith
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்!