காங்கேசன்துறை துறைமுகத்தில் அதிரடி: ஸ்கேனிங் பரிசோதனையில் அம்பலமான நூதன தங்கம் கடத்தல்!

காங்கேசன்துறை ஊடாக நேற்றைய தினம் நாகைபட்டினம் செல்ல தயாரான சமயம் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட 26 பயணிகளில் 17 பேருக்கு மேற்கொண்ட ஸ்கானிங் பரிசோதனையில் ஆறு பேரின் உடம்புக்குள் உடம்பிற்குள் தங்கத்தை கடத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து நாகைபட்டினம் பயணிக்பும் பயணிகள் பலர் தங்கம் கடத்துவதாக எழுந்த சந்தேகத்தின் பெயரில் 26 பயணிகள் தடுத்து வைக்கப்பட்டு ஸ்கானிங் பரிசோதணைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

நாகபட்டினம் காங்கேசன்துறை இடையே இடம்பெறும் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவையில் நேற்று காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகைபட்டினம் பயணிக்க காங்கேசன்துறை துறைமுகத்தில் காத்திருந்த பயணிகளில் 26 பேர் பயணிக் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் அனுமதிக்காது தடுத்து வைக்கப்பட்டனர்.

தடுக்கப்பட்டவர்களில் 17 இந்தியர்களும், 6 பெண்கள் உள்பட 9 இலங்கையரும் உள் அடங்குகின்றனர்.

தடுத்து வைக்கப்பட்ட 26 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட பரிந்துரைக்கப்பட்டபோதும் 17 பேரே போதனா வைத்தியசாலை அழைத்து வரப்பட்டு ஸ்கானிங் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவர்களில் ஆறு பேர் தங்கத்தை விழுங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் நாலு ஆண்கள் இந்தியர்களும் இரண்டு பெண்கள் இலங்கையர்களும் உள்ளடங்குவார்கள்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

srilankan airlines
சிட்னி நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் மீது மின்னல் தாக்குதல்; 40 நிமிடங்களில் மீண்டும் கட்டுநாயக்கவில் தரையிறக்கம்!
Sangeetsan
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான கலைஞர் சங்கீத்சனின் பிணை மனு மீதான உத்தரவு 23 இல்!
negombo protest
உயிர்த்த ஞாயிறு விசாரணைக்கு இடையூறு விளைவிக்காதே: நீர்கொழும்பில் அமைதிப் போராட்டம்!
srilanka weather
காங்கேசன்துறை - கற்பிட்டி கடற்பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம்
yositha rajapaksha
கல்வித் தகுதி மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிகளில் முறைகேடு: இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் யோஷித ராஜபக்ஷ!
சசி வீரவன்ச
சசி வீரவன்சவின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு: சிறைத்தண்டனை உறுதி!