பேருந்தில் யுவதிக்கு அங்கசேட்டை: பலாலி இராணுவ அதிகாரி யாழ்ப்பாணத்தில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஓடும் பேருந்திற்குள் யுவதியொருவருடன் அங்க சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் , இராணுவ கப்டன் தர அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து பலாலி வீதியூடாக பலாலி நோக்கி சென்ற பேருந்தில் , பயணித்த யுவதியுடன் , ஒருவர் அங்க சேட்டை புரிந்து, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட யுவதி , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தொலைபேசி ஊடாக தகவல் வழங்கியதை அடுத்து , விரைந்து செயற்பட்ட பொலிஸார் ஆரியகுளம் பகுதியில் வைத்து பேருந்தை மறித்து , குறித்த நபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் , குறித்த நபர் பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் 09ஆவது காலாட்படை பிரிவை சேர்ந்த கப்டன் தர அதிகாரி என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Qatar
கத்தார் எரிவாயு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 54 பேர் காயம், 18 தொழிலாளர்களைக் காணவில்லை!
Singer Sathyan
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்திய இந்திய பின்னணிப் பாடகர் சத்தியன்!
Suresh Saleh
பிள்ளைகளைப் பின்தொடர்ந்து வீடியோ எடுக்க முயற்சி: பாதுகாப்பு கோரும் சுரேஷ் சலேயின் மனைவி
us-iran-swiss
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை: அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் சுவிட்சர்லாந்தில் முதலாம் நாள் அமர்வு நிறைவு!
protest london
லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக தமிழர்கள் போராட்டம்
NEWS
நயினாதீவு கடலில் பலியான அதிபரின் மகன் 9A சித்தி பெற்று சாதனை!