ஜனாதிபதி செயலக ஊழியர் நியமன முறைக்கேடு: முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளருமான அகில விராஜ் காரியவசம், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்று (05) புதன்கிழமை காலை ஆணைக்குழுவின் அலுவலகத்தில் முன்னிலையாகியிருந்தார்.

அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு ஊழியர்களை நியமித்தமை மற்றும் அவர்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் குறித்து இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Harshana Nanayakkara
செம்மணி புதைக்குழி: உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி – நீதி அமைச்சர்!
australia
"தற்காப்பு எனக்கூறி தலையில் தாக்குவதா?" — இலங்கை வம்சாவளி இளைஞருக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் சிறை தண்டனை!
anura
அரச செலவைக் குறைக்க நடவடிக்கை: 5 ஜனாதிபதி மாளிகைகள் சுற்றுலாத்துறைக்குக் குத்தகைக்கு!
ShakthiSAT
ShakthiSAT சர்வதேச விண்வெளி திட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 18 வயது மாணவி!
vavuniya
வவுனியாவில் சோகம்: ஊஞ்சல் தடி முறிந்து விழுந்து 5 மாதக் குழந்தை பரிதாப பலி!
Chaminda Wijesiri
2019 பண்டாரவளை பொலிஸ் மோதல் வழக்கு: பதுளை எம்.பி சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை!