பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளை கைதிகளுக்கு வழங்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்!

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகளுக்கு போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர், பல இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதிகள் இந்த கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தி சிறைச்சாலைக்குள் இருந்து உறவினர்களுடனும் வெளிநாட்டில் உள்ள குற்றவாளிகளுடனும் தொடர்புகளை பேணி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

இந்த கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் சிலருக்கு இலஞ்சமாக பணம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

பூஸா சிறைச்சாலையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில் பல கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பில் பொலிஸார் மற்றும் சிறைச்சாலை உயர் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
கிளிநொச்சியில் இளம் கலைஞர் கைது: அரசின் இரட்டை நிலைப்பாட்டைச் சாடும் நாமல் ராஜபக்ஷ!
vavuniya
மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்: வவுனியா 'சிறுவர் பாதாளக் குழு' சிக்கியது! 7 பேருக்கு நீதிமன்ற உத்தரவால் சிறுவர் இல்லத்தில் அடைப்பு!
arrest
எழுச்சி பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் பகிர்ந்த கிளிநொச்சி சொல்லிசை கலைஞன் கைது!
vavuniya accident
கனகராயன் குளத்தில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் உயிரிழப்பு.!
chennai srilankan girl death
சென்னை கோயம்பேடு கொடூரம்: காரில் மோதி இலங்கை பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுமியும் பலி
gotabaya rajapaksa
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் - கோட்டாபய உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத்தடை