இலங்கையின் வான்பரப்பில் இன்று ஏற்படவுள்ள அதிசயம்!

இலங்கையின் வான் பரப்பிலும் இன்றிரவு விண்கல் மழை பொழிவை பார்வையிட மக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தாண்டு மிக முக்கியமான விண்கல் மழை பொழிவுகளில் ஒன்றை இன்றிரவு காண முடியும் என விண்வெளி விஞ்ஞானியும் பொறியியலாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இன்றிரவு 11 மணிக்குப் பிறகு வானத்தை உற்று நோக்கும்போது ஓரியோனிட்ஸ் எனப்படும் விண்கல் மழையைக் காணலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓரியன் விண்மீன் கூட்டத்தை சுற்றி இந்த விண்கல் மழையைக் காணலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதிகாலை மூன்று மணி முதல் ஐந்து மணி வரை ஓரியோனிட்ஸ் விண்கல் மழையை மிகத் தெளிவாகக் காணலாம் என விஞ்ஞானி கூறியுள்ளார்.

இந்த விண்கல் மழை ஹெலி எனப்படும் வால் நட்சத்திரத்திலிருந்து ஏற்படுகிறது என விண்வெளி விஞ்ஞானியும் பொறியியலாளருமான கிஹான் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

flood
பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!
srilanka
டித்வா புயல் தாக்கம் - மரணங்கள் 350 ஐ கடந்தது
tourist
இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!
anura
நாட்டில் அவசரகால சட்டம் பிரகடனம்!
water cut
.நீர்விநியோகம் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
al exam
க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு