காலிப் பகுதியில் மாணவிகளின் சீருடையில் சிவப்பு மை தெளித்த விவகாரம்: ஆசிரியர் ஒருவர் கைது

காலிப் பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர், வீதியில் சென்ற மாணவிகளின் வெள்ளை நிறச் சீருடைகளில் சிவப்பு மையினைத் தெளித்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் குறித்த சர்வதேசப் பாடசாலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே ஆசிரியராகப் பணியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காலியில் சாரேவன்துக்கடை சந்தியில் வைத்து, அங்கு சென்ற பல மாணவிகளின் சீருடைகளின் பின்புறத்தில் இவர் சிவப்பு மையினைத் தெளித்துள்ளார்.

இந்தச் செயல் அங்கிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது. குறித்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

சமூக ஊடகங்களில் பரவிய காணொளி மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் தகவல்களின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த காலி பொலிஸார், சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆசிரியரை காலி மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காலி பொலிஸாரின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
திருகோணமலையில் பிரசவத்தின் போது சிசு மரணம்: இரு வைத்தியர்கள் பணி இடைநீக்கம்!
vijay
மு.க. ஸ்டாலினைச் சந்திக்கிறார் தமிழக முதல்வர் விஜய்: அதிரும் தமிழக அரசியல்!
may 18
நினைவுகளே எமது பேராயுதம்; தமிழ்த் தேசிய உணர்வே எமது பலம்: தமிழ் சிவில் சமூக அமையம் அறைகூவல்!
may 18
தமிழ் நாட்டு சட்டசபையில் மே 18ஐ முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக நிறைவேற்றுமாறு கோரிக்கை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
tvk
விசிக-வின் அதிரடி முடிவை நோக்கித் தமிழகம்! தமிழக அரசியல் களத்தில் இறுதி நிமிடப் பரபரப்பு!
vijay tvk
"பதவிக்காக யார் காலிலும் விழமாட்டேன்!"- அதிரடி முடிவெடுக்கிறாரா விஜய்? ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறி!