கோட்டாபயவின் மனு பரிசீலனை நிறைவு: தீர்ப்பு செப்டெம்பர் 22-க்கு ஒத்திவைப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரிட் மனுவொன்றை தாக்கல் செய்திருந்திருந்தார்.

குறித்த மனு மீதான தனது பரிசீலனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (03) நிறைவு செய்துள்ளது.

இந்த நிலையில் மனுவை மேற்கொண்டு விசாரிக்க அனுமதி வழங்குவது குறித்த தனது தீர்ப்பு செப்டெம்பர் 22 அன்று வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும், இவ்வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வமான வாதங்கள் ஓகஸ்ட் 31-ஆம் திகதிக்கு முன்னரோ அல்லது அன்றோ தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தம்மைக் கைது செய்வதற்குத் தடை விதிக்கக் கோரி கோட்டாபய ராஜபக்சவினால் இந்த மனு கடந்த ஜூன் மாதம் 16 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!