இலங்கை முழுவதும் நீதிபதிகளை தெரிவு செய்வதற்காக நீதி சேவைகள் ஆணைக்குழுவினால் நடாத்த பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து அதன் பின்னர் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட மன்னார் தாழ்வுபாடு கிராமத்தைச் சேர்ந்த சட்டத்தரணி அன்ரனி சர்மிலன் டயஸ் தற்போது நீதவானாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் தாழ்வுபாடு கிராமத்தைச் சேர்ந்த சட்டத்தரணி அன்ரனி சர்மிலன் டயஸ் மன்னார் மாவட்டத்தின் மூன்றாவது நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை புதிதாக நியமனம் பெற்ற நீதிபதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.
