🔴 VIDEO அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற யாழ் மாணவர்!

2025ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி, தமிழ் மொழியில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 194 என்ற அதிகபட்ச மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.

இன்று (04) காலை நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ​​பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலமாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (03) இரவு இணையத்தில் வெளியிடப்பட்டன.

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 10 ஆம் திகதி நாடு முழுவதும் 2,787 மையங்களில் நடைபெற்றதுடன், மொத்தம் 307,951 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் கூற்றுப்படி, இந்த ஆண்டு மொத்தம் 901 சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

In the conflict between brothers
சகோதரர்களுக்கிடையிலான மோதலில் ஒருவர் உயிரிழப்பு!
The four sluice gates
கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு!
Sivajilingam
அவசர சிகிச்சை பிரிவில் வல்வெட்டித்துறை நகரபிதா சிவாஜிலிங்கம் அனுமதி!
italy
இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!
landslide
பேரிடரில் காணாமல் போன வெளிநாட்டவர்களுக்கும் மரணச் சான்றிதழ்!
Woodler
கோடிக்கணக்கான சொத்துகள் பறிமுதல்:அநுர அரசின் அதிரடி நடவடிக்கை!