வெளிநாட்டில் சுற்றிவளைக்கப்பட உள்ள மற்றுமொரு குழு: அநுர அரசின் அதிரடி

அநுர அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கையால் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள இலங்கையை சேர்ந்த குற்றவாளிகள் கலக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள இலங்கையை சேர்ந்த சுமார் 25 குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்டர்போல் அதிகாரிகள் இலங்கை பொலிஸாருக்கு உதவிவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து டுபாய் மற்றும் இந்தியாவில் பதுங்கியுள்ள இலங்கை குற்றவாளிகள் தங்கள் இருப்பிடங்களை மாற்றத் தொடங்கியுள்ளனர்.

எனினும், அவர்கள் வேறு நாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க இன்டர்போல் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாருக்கு மிகவும் அவசியமாக உள்ள 25 குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இலங்கை புலனாய்வு துறையின் நேர்த்தியான செயற்பாடு காரணமாக, வெளிநாடுகளில் பதுங்கியிருந்த குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 18 பேர் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்கள் பாதாள உலகக்குழு மற்றும் போதைப்பொருள் வலையமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

shritharan mp
"செம்மணி மனிதப் புதைகுழி தமிழ் இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சி!" நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்
buddhist monk arrested
அமெரிக்க பொலிஸாரின் 'ஒப்பரேஷன் ரெட் கார்ட்' அதிரடி: இலங்கை தேரர் உட்பட 7 பேர் கைது!
Sugeeswara Bandara
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சுகீஸ்வர பண்டார கைது!
trincomalee
திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய நிலத்தடி சிறைக்கு சீல் வைக்கப்படுகிறது!
Kankesanthurai Port
காங்கேசன்துறை துறைமுகத்தில் அதிரடி: ஸ்கேனிங் பரிசோதனையில் அம்பலமான நூதன தங்கம் கடத்தல்!
iran-us
அமெரிக்கா - ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம்: சுவிட்சர்லாந்தில் ஜூன் 19 அன்று கையெழுத்தாகிறது!