இலங்கையில் கடமையின்போது உயிரிழந்த மற்றுமொரு அதிகாரி!

குருணாகல் பகுதியில் நேற்று இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்பவியலாளர் ஒருவர் கடமையின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

பொவத்த – வீரபொக்குண வீதியில் சேதமடைந்த குறைந்த மின்னழுத்த மின் இணைப்பைப் பழுதுபார்க்கும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது இந்த சம்பவம்
நேர்ந்துள்ளது.

மின்சாரம் தாக்கியதில் பாதிக்கப்பட்ட 41 வயதுடைய குறித்த நபர், வீரபொக்குண ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

எனினும், அனுமதிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தின் பின்னர் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தம்புள்ளையில் தற்காலிக ஊழியராக 2007 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கிய இவர், 2017 ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபையின் நிரந்தரப் பணியாளரானார்.

அண்மையில் ஹெட்டிப்பொல உப மின் நிலையத்துடன் இணைக்கப்பட்ட இவர், அர்ப்பணிப்புடன் கடமையாற்றி ஒருவரென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

maithripala sirisena
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மைத்ரிக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை ரத்து!
namal
பெருந்திரளான ஆதரவாளர்களுக்கு மத்தியில் சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் நாமல் ராஜபக்ஷ!
Shiranthi Rajapaksa
4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம்! FCID யிலிருந்து வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச
sritharan
பறிக்கப்பட்ட சிறீதரனின் தலைவர் பதவி! சாணக்கியனுக்கு சுமந்திரனால் வழங்கி வைப்பு!
al student
உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு வெளியான தகவல்!
three wheel accident
235 அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கர வண்டி விபத்து!