வெள்ள நீரைக் கடக்க முயன்ற பேருந்து: நடத்துனரும் ஓட்டுநரும் இடைநீக்கம்!

கும்புக்கனை பகுதியில் வெள்ள நீரைக் கடக்க முயன்றதன் மூலம் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்த மொனராகலை – கொழும்பு பேருந்து தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

பேருந்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கடந்த 03 ஆம் திகதி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் முன்னிலையாகினர்.

அதன்படி அவர்களின் தவறான நடத்தை குறித்த விசாரணையைத் தொடர்ந்து, பேருந்து வழித்தட அனுமதி இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், நடத்துனர் மற்றும் ஓட்டுநர் ஒரு மாத காலத்திற்கு சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

maithripala sirisena
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மைத்ரிக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை ரத்து!
namal
பெருந்திரளான ஆதரவாளர்களுக்கு மத்தியில் சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் நாமல் ராஜபக்ஷ!
Shiranthi Rajapaksa
4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம்! FCID யிலிருந்து வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச
sritharan
பறிக்கப்பட்ட சிறீதரனின் தலைவர் பதவி! சாணக்கியனுக்கு சுமந்திரனால் வழங்கி வைப்பு!
al student
உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு வெளியான தகவல்!
three wheel accident
235 அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கர வண்டி விபத்து!