நகர சபை எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் சடலங்களாக மீட்பு!

கண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யட்டினுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் பெண் குழந்தை ஆகியோரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் யஹலதென்ன பகுதியில் உள்ள அவர்களது வீட்டி இன்று இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்கள் 52 வயதுடைய அரசியல்வாதி எனவும் அவரது 44 வயதுடைய மனைவி மற்றும் 17 வயதுடைய மகள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யட்டினுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.

மேலும் அவரது மனைவி மற்றும் மகளின் உடல்கள் வீட்டின் அறைகளில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (3)
வெளிநாட்டவர் ஒருவரை நடனமாடி வரவேற்ற ஊழியர்கள்: வைரலான வீடியோவால் வலுக்கும் கண்டனம்
New Project t (1)
நாடாளுமன்றில் கடும் குழப்பம்: சபாநாயகரை "வாயை மூடுங்கள்" என கூறிய எதிர் கட்சியின் பெண் எம்.பி!
New Project t
மூளாய் பகுதியில் தொடரும் பொலிஸ் பாதுகாப்பு! மேலும் மூவர் அதிரடிக் கைது!
Jaffna TID
யாழில் ரி.ஐ.டியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்
kundu0
86 கைக்குண்டுகளுடன் வவுனியாவில் ஒருவர் கைது
New Project t (4)
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் கொலைக் களமாக? - போராட்டத்தில் குதித்த மக்கள்!