ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு இணக்கம்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், ஈரானின் எரிவாயு வயல்கள் (Gas fields) மீதான அடுத்தக்கட்டத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தீர்மானித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வேண்டுகோளுக்கிணங்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நெதன்யாகு குறிப்பிட்டதாக பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, ட்ரம்பை ஈரானுடனான போருக்குள் தாம் இழுப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் இதன்போது நிராகரித்தார்.

மறுபுறம், ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் ஜெரூசலம் ஆகிய பகுதிகளில் பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஈரானின் உட்கட்டமைப்புகள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால், எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரானிய வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய அரபு இராச்சியம் , குவைத், சவூதி அரேபியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் கடந்த சில மணித்தியாலங்களில் ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இத்தாக்குதல்களுக்கு ஈரானே காரணம் என கை்கிய அரபு இராச்சியமும், பஹ்ரைனும் குற்றம் சுமத்தியுள்ளன.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி போர் ஆரம்பித்தது முதல் ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,186 ஆக உயர்ந்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்பான ‘ஹரானா’ (Hrana) தெரிவித்துள்ளது.

கத்தாரின் ‘ராஸ் லப்பான்’ எரிசக்தி முனையம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran - us
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை கோரிக்கையை மறுத்தது ஈரான்!
pillayan
பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலை!
petrol price sri lanka
நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை!
crime
தாதியர் பயிற்சி மாணவர் தங்கியிருந்த அறையில் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் விசாரணை
police
மதுபான நிலைய முற்றுகையின் போது பொலிஸாரைக் கடிக்க 'ரொட்வைலர், ஜெர்மன் ஷெப்பர்ட்' நாய்களை ஏவிவிட்ட பெண்!
jaffna
நாவற்குழியில் வீடு மீது வன்முறை கும்பல் தாக்குதல்: மீட்டர் வட்டி தகராறில் கொடூரம்!