நீர்கொழும்பு சிறைச்சாலையில் பயங்கர மோதல்: அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு; 50 பேர் வரை காயம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் திங்கட்கிழமை (06) காலை ஏற்பட்ட மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள் மூவர் உட்பட மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திங்கட்கிழமை (06) காலை காலை 11.00 மணி நிலவரப்படி, காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இதில் சிறைச்சாலை அதிகாரிகள், காவல்துறையின் விசேட அதிரடிப்படை (STF) வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அடங்குவர். உயிரிழந்தவர்களில் ஒருவர் கைதி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; மற்றுமொருவர் யார் என்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லை என வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் பல அதிகாரிகளை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களில் சிறைச்சாலை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் கைதிகள் எனப் பல தரப்பினரும் உள்ளடங்குவதாகவும் அறிய முடிகிறது.

ஞாயிற்றுக்கிழமை (05) அன்று ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்ததுடன், 33 பேர் காயமடைந்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, கடந்த இரு தினங்களில் இடம்பெற்ற இந்த வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதுடன், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 50-ஐ நெருங்கியுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!