நீர்கொழும்பு சிறைச்சாலையில் பயங்கர மோதல்: அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு; 50 பேர் வரை காயம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் திங்கட்கிழமை (06) காலை ஏற்பட்ட மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள் மூவர் உட்பட மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திங்கட்கிழமை (06) காலை காலை 11.00 மணி நிலவரப்படி, காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இதில் சிறைச்சாலை அதிகாரிகள், காவல்துறையின் விசேட அதிரடிப்படை (STF) வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அடங்குவர். உயிரிழந்தவர்களில் ஒருவர் கைதி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; மற்றுமொருவர் யார் என்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லை என வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் பல அதிகாரிகளை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களில் சிறைச்சாலை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் கைதிகள் எனப் பல தரப்பினரும் உள்ளடங்குவதாகவும் அறிய முடிகிறது.

ஞாயிற்றுக்கிழமை (05) அன்று ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்ததுடன், 33 பேர் காயமடைந்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, கடந்த இரு தினங்களில் இடம்பெற்ற இந்த வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதுடன், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 50-ஐ நெருங்கியுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran - us
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை கோரிக்கையை மறுத்தது ஈரான்!
pillayan
பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலை!
petrol price sri lanka
நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை!
crime
தாதியர் பயிற்சி மாணவர் தங்கியிருந்த அறையில் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் விசாரணை
police
மதுபான நிலைய முற்றுகையின் போது பொலிஸாரைக் கடிக்க 'ரொட்வைலர், ஜெர்மன் ஷெப்பர்ட்' நாய்களை ஏவிவிட்ட பெண்!
jaffna
நாவற்குழியில் வீடு மீது வன்முறை கும்பல் தாக்குதல்: மீட்டர் வட்டி தகராறில் கொடூரம்!