ஈரானுக்கு எதிரான போரில் இணையாத நாடுகள்: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடும் விமர்சனம்

ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கைகளில் இணைவதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நாடுகளை இலக்கு வைத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தனது விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால் விமான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும், அதேவேளை ஈரான் ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்காத பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு ஒரு கேலியான ஆலோசனையை முன்வைத்து, அவர் சமூக ஊடகங்களில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்:

“உங்களிடம் கூற என்னிடம் இரண்டு யோசனைகள் உள்ளன. முதலாவது, அமெரிக்காவிடம் இருந்து எரிபொருளை விலைக்கு வாங்குங்கள், எங்களிடம் தாராளமாக உள்ளது. இரண்டாவது, இப்போதாவது தாமதமாகவோ அல்லது தைரியத்தை வரவழைத்துக்கொண்டோ ஹோர்முஸ் நீரிணைக்குச் சென்று உங்களுக்குத் தேவையானதை பலவந்தமாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.”

இதன்போது பிரான்ஸ் குறித்து பிரத்யேகமாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், “பொருட்களை ஏற்றிச் செல்லும் அமெரிக்க விமானங்களுக்கு பிரான்ஸ் தனது வான்பரப்பைப் பயன்படுத்த அனுமதி வழங்காதது மிகவும் மோசமானது” என்றும் குற்றம் சாட்டினார்.

ஹோர்முஸ் நீரிணையில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்க விருப்பமின்மை தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளும் அவற்றின் தலைவர்களும் ஜனாதிபதி ட்ரம்பின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Ceylon Petroleum Corporation
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முக்கிய அறிவிப்பு!
Suresh Saleh
தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதி!
meta
சிறுவர்களுக்கு ஆபத்தா? மெட்டாவுக்கு நீதிமன்றம் அதிரடி
power cut
மின்சாரத் தடையைத் தவிர்க்க வேண்டுமா? நாட்டு மக்களுக்கு வெளியான அறிவிப்பு!
jaffna police issue
யாழில் சுற்றுலா சென்றவர்களை தாக்கிய பொலிஸார் - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!
fuel
எரிபொருள் விநியோகத்தில் முடிவுக்கு வருகிறதா 'ஒற்றை மற்றும் இரட்டை' இலக்க முறைமை?