இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதி வரை மின்சார உற்பத்தி மற்றும் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே கருத்துத் தெரிவிக்கையில்:

தற்போது இலங்கையிடம் உள்ள எரிபொருள் அளவு, நாட்டின் உண்மையான தேவையை விட சுமார் 10% அதிகமாகவே உள்ளது.

எரிபொருள் விநியோகத்தில் எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை என்பதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டால், அது கையிருப்பு இல்லாததால் அல்ல; மாறாக பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைச் சேமித்து வைப்பதாலும், விநியோகத் தற்காலிகத் தடைகளாலுமே ஏற்படும்.

அத்தியாவசியத் தேவைக்கு மேலதிகமாக எரிபொருளைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Minab 168
“மினாப் 168” விமானம் : தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்த ஈரானியர்கள்!
Thaiyiddi
யாழ். தையிட்டி விகாரை காணியை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை
whatsapp number
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்க விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
Vedukkunari Mala
வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் - டக்ளஸ் எச்சரிக்கை!
canada
கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூவர் கைது
ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்