எரிபொருள் விநியோகத்தில் முடிவுக்கு வருகிறதா ‘ஒற்றை மற்றும் இரட்டை’ இலக்க முறைமை?

எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய காலப்பகுதியில் கேள்வியைக் கட்டுப்படுத்துவதற்காகவும், வரிசைகளைக் குறைப்பதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டை – ஒற்றை இலக்க எரிபொருள் விநியோக முறைமையை நீக்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ.ராஜகருண தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் எதிர்வரும் மே மாதம் இறுதி வரை நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது.

எரிபொருள் கொள்வனவு தொடர்பான அத்தியாவசிய டெண்டர்கள் ஏற்கனவே கோரப்பட்டுள்ளன. எதிர்வரும் வாரங்களில் நாட்டில் எவ்வித தடையுமின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய காலப்பகுதியில் கேள்வியைக் கட்டுப்படுத்துவதற்காகவும், வரிசைகளைக் குறைப்பதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டை – ஒற்றை இலக்க எரிபொருள் விநியோக முறைமையை நீக்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

எரிபொருள் நிலையங்களில் வாகன வரிசைகள் தொடர்ந்து குறைந்து, நிலைமை முழுமையாக வழமைக்குத் திரும்பும் பட்சத்தில், இந்த விநியோகக் கட்டுப்பாட்டு முறைமையை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Minab 168
“மினாப் 168” விமானம் : தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்த ஈரானியர்கள்!
Thaiyiddi
யாழ். தையிட்டி விகாரை காணியை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை
whatsapp number
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்க விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
Vedukkunari Mala
வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் - டக்ளஸ் எச்சரிக்கை!
canada
கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூவர் கைது
ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்